Aug 31, 2020

இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை

                                                    
 

இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா.....எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா......எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய ஆவியாராகிய இறைவா.....எங்கள் மேல் இரக்கமாயிரும்
என்றும் வாழும் பிதாவின் திருச்சுதனாகிய இயேசுவின் திருஇதயமே.......
புனித கன்னித்தாயின் வயிற்றில் தூய ஆவியாரால் உருவான இயேசுவின் திருஇதயமே.......
தேவவார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திருஇதயமே......
அளவற்ற மருத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திருஇதயமே.....
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திருஇதயமே......
அதிஉன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திருஇதயமே.....
இறைவனின் இல்லமும் விண்ணகவாசலுமான இயேசுவின் திருஇதயமே,....
அன்புத்தீ சுவாசித்து எரியும் சூளையான இயேசுவின் திருஇதயமே.....
தயாளமும் சிநேகமும் நிறைந்த இயேசுவின் திருஇதயமே......
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப்பெற்ற இயேசுவின் திருஇதயமே......
எல்லா ஆராதனைப் புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திருஇதயமே......
இதயங்களுக்கெல்லாம் அரசும், அவைகளின் மையஇடமுமான இயேசுவின் திருஇதயமே.......
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திருஇதயமே.......
இறைத்தன்மை முழுமையாகத் தங்கிவழியும் இயேசுவின் திருஇதயமே......
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திருஇதயமே......
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் இயேசுவின் திருஇதயமே.......
நித்திய சிகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திருஇதயமே......
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திருஇதயமே......
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவையளிக்கும் தாராளமான இயேசுவின் திருஇதயமே........
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திருஇதயமே.......
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திருஇதயமே....
மரணம் வரையும் கீழ்ப்படிந்திருந்த இயேசுவின் திருஇதயமே.....
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திருஇதயமே.....
ஆறுதல் அனைத்தின் ஊற்றான இயேசுவின் திருஇதயமே.....
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திருஇதயமே.....
பாவங்களின் பலியான இயேசுவின் திருஇதயமே......
உம்மிடம் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மீட்பான இயேசுவின் திருஇதயமே......
உம்மில் இறப்பவர்களின் நம்பிக்கையான இயேசுவின் திருஇதயமே......
எல்லாப் புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திருஇதயமே......

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ...... எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ......எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ......எங்களைத் தயை செய்து மீட்டருளும்

 
இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுள்ள இயேசுவே
எங்கள் இதயம் உமது இதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்

மன்றாடுவோமாக
                    என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகனின் இதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி மன்னிப்பளித்தருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

திரு இருதய ஆண்டவருக்கு ஜெபம் (மிகவும் வல்லமை மிக்க செபம்)

                                                              



திரு இருதய ஆண்டவருக்கு ஜெபம்

(மிகவும் வல்லமை மிக்க செபம்)

எல்லாம் வல்ல இறைவனே நான் மிகுந்த விசுவாசத்துடன் உம்மிடம் கெஞ்சிக் கேட்கிறேன். எனக்கு இத்துன்பகரமான வேளையில் உமது வல்லமையான கரங்களால் ஆறுதல் அளித்தருளும்.

என்னிடம் பாராமுகமாய் இராதேயும் நல்ல இயேசுவே.
உமது கதவுகளை எனக்கு திறந்து விடும்.
உமது வல்லமையான கரங்கள்தாம், நான் விரும்பும் சக்தியை எனக்கு என்றும் அளிக்க வல்லன.

(உங்கள் 03 கஷ்டங்களை கூறவும்)

என் ஆண்டவரே இரந்து கேட்கும் பாவியான என் இதயத்தின் வேண்டுதலுக்கு செவிசாய்த்தருளும்.
உமது நித்திய வீட்டை நான் என்றும் அடைய எனக்கு என்றும் வழிகாட்டியருளும், ஆமென்.

இயேசுவே எனக்கு உதவியருளும்

* என் ஒவ்வொரு தேவைகளின் போதும் தாழ்மையுடனும், நம்பிக்கையுடனும் உம்மிடம் வர இயேசுவே எனக்கு உதவியருளும்.

*என் சந்தேகங்களில், கலக்கங்கள், சோதனைகளில் இயேசுவே எனக்கு உதவியருளும்.

*என் நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், துன்பங்கள் வேதனைகளில் இயேசுவே எனக்கு உதவியருளும்.

*மற்றவர் என்னை ஏமாற்றும் போது உம்மை மட்டும் நம்பியிருக்கும் எனக்கு இயேசுவே எனக்கு உதவியருளும்.

*நீரே என் ஆண்டவர், மீட்பர் என நான் வரும் போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

*என் வாழ்வில் எல்லா முயற்சிகளுமே தோல்விகளாக மாறும் போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

*நான் பொறுமையிழந்து என் சிலுவைகள் துன்பத்தின் மீது துன்பத்தை தரும் போது இயேசுவே எனக்கு உதவியருளும்

.*நான் தனிமையில் வருத்தத்திலும் வேதனையிலும் உழலும் போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

*எப்போதும் எனது பலவீனங்கள் தோல்விகளின் போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

(முக்கிய குறிப்பு: இச் செபம் வல்லமை மிக்கது. உங்கள் வேண்டுதல் எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் இச் செபத்தின் மூலம் அடையலாம். மாதத்தின் முதல் வெள்ளியிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு இச் செபத்தை ஜெபிக்கவும்.

ஒவ்வொரு நாளும் ஒரு மெழுகுவர்த்தியைக் கொழுத்தி ஜெபம் முடிய அணைத்து விடவும்.15 வது நாள் முழு மெழுகுவர்த்தியையும் எரிய விடவும்.15 நாளும் ஒரே மெழுகுதிரியை உபயோகிக்கவும்)

ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள் உன் உள்ளத்து விருப்பஙகளை அவர் நிறைவேற்றுவார்.

இயேசுவின் திரு இருதய ஜெபமாலை / இயேசுவின் திரு இருதய பக்தி மாலை

                                                

 

 இயேசுவின் திரு இருதய ஜெபமாலை

கிறிஸ்துவின் ஆன்மாவே என்னைப் புனிதமாக்கும்.
கிறிஸ்துவின் திரு உடலே என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே என்னை எழுச்சியூட்டும்.
கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே என்னைக் கழுவிடுமே.
கிறிஸ்துவின் பாடுகளே என்னைத் தேற்றிடுமே.
ஓ நல்ல இயேசுவே எனக்குச் செவிசாயும்.
உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரிய விடாதேயும்.
தீயப் பகைவரிடம் இருந்து என்னைக் காத்தருளும்.
எனது இறப்பின் வேளையினில் என்னை அழைத்தருளும்.
உம்மிடம் வர எனக்குக் கட்டளையிட்டருளும்.
புனிதர்களுடன் எக்காலமும் உம்மைப் புகழச் செய்யும்.
  
தேவரகசிய கருத்துக்கள்:

1. பிற மதத்தினரால், பிரிவினைச் சகோதரரு அனைவராலும் இழைக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
2. மாசு நிறைந்த கிறிஸ்தவர்களால் ஏற்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
3. நாம் அனைவரும் கட்டிக்கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
4. மனிதர் அனைவராலும் வருவிக்கப்படும் அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
5. எல்லாரும் திருஇருதயத்தை அறிந்து அன்புசெய்யுமாறு அமல அன்னை, புனிதர் அனைவரின் அன்புப் பெருக்குடன் ஒப்புக்கொடுப்போம்.

பெரிய மணியில்:
முதல் : திரு இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே…
எல்: எங்கள் இருதயத்தை உமது இருதயத்தைப் போல் மாற்றியருளும்.

சிரிய மணியில்:
முதல் : இயேசுவின் மதுரமான திரு இருதயமே…
எல்: என் சிநேகமாயிரும்.

பத்து மணி முடிவில்:
முதல் : மரியாவின் மாசற்ற இருதயமே…
எல்: என் இரட்சணியமாயிரும்

ஐம்பது மணி முடிவில்:
முதல் : இயேசுவின் திரு இருதயமே…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முதல் : பிறப்பு நிலைப் பாவமில்லாமல் உதித்த தூய மரியாவின் மாசற்ற திரு இருதயமே…
எல்: எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

முதல் : இயேசுவின் திரு இருதயமானது…
எல்: எங்கும் போற்றப்படுவதாக.

முதல் : திரு இருதயத்தின் அன்பரான தூய யோசேப்பே…
எல்: எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முதல் : இயேசுவின் திரு இருதயமே ! உமது ஆட்சி வருக. எங்கள் பாவங்ளை மன்னித்தருளும். எனது செபம், தபம், அனுதின செயல்கள், இன்ப துன்பம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனது இறுதி மூச்சு வரை உம்மை அன்பு செய்யவும், உம்மை மாட்சிப்படுத்தவும் வரம் தாரும்.
எல்: ஆமென்.

 
 

இயேசுவின் திரு இருதயத்திற்குக் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் செபம் / இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி மன உச்சாரணம் / இயேசுவின் திரு இருதய ஜெபங்கள்

                                                
 

 இயேசுவின் திரு இருதயத்திற்குக் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் செபம்

          இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும். தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.
 
    இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக. இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். - ஆமென்.

இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
 

இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி மன உச்சாரணம் :

 
    இயேசுவின் திரு இதய அன்பே, உமது அன்பு இதயத்தில் பற்றியெறிய செய்தருளும்.
        இயேசுவின் திரு இதய த் திடமே, என்னை திடப்படுத்தியருளும்.
        இயேசுவின் திரு இதய இரக்கமே, எனக்கு மன்னிப்பளித்தருளும்.
        இயேசுவின் திரு இதயப் பொருமையை, என் குறைகளை பொருத்தருளும்,
        இயேசுவின் திரு இதய அரசே, என்னை உம் வசப்படுத்தியருளும்.
        இயேசுவின் திரு இதய சித்தமே, என்னை ஆட்கொள்ளும்.
இயேசுவின் திரு இதயப் பற்றுதலே, என் இதயத்தைத் தகனப்பலியாக்கியருளும்
அமல உற்பவியான கன்னிமரியே, இயேசுவின் திரு இதயத்திடம் எங்களுக்காக வேண்டிகொள்ளும். -ஆமென். 
 
 
 

Aug 30, 2020

Jebamalai In Tamil/ஜெபமாலை தமிழில்/ஜெபமாலை சொல்லும் முறை

                                                                    

  வல்லமையுள்ள ஜெபமாலை 

                                                                                                


அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரம்:

         அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

பரிசுத்த ஆவி ஜெபம்:

            பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே, வெயிலின் குளிர்ச்சியே, அழுகையின் தேற்றரவே எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே! உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிரதை சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதை செம்மையாய் நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

                    சர்வேசுவரா எங்களுக்கு உதவியாயிரும். கர்த்தாவே எங்களுக்கு ஒத்தாசை செய்தருளும். பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியில் இருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

ஜெபமாலை துவங்கும் விதம்:

                     அளவில்லாத சகல நன்மையும், சுரூபியுமயிருக்கிற எங்கள் சர்வேசுரா சுவாமி! நீச மனிதரும் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்களது மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச்சந்நிதிலே இருந்து ஜெபம் பண்ணப் பாத்திரமாகாதவர்களாய் இருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத தயவை நம்பிக்கொண்டு தேவரீருக்குத் துதி வணக்கமாகவும் பரிசுத்த தேவ மாதாவிற்குத் ஸ்தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணி ஜெபம் பண்ண ஆசையாயிருக்கிறோம். இந்த ஜெபத்தை பக்தியோடே செய்து, பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசையைக் கட்டளை பண்ணியருளுங்கள் சுவாமி. சகலமான புண்ணியங்களுக்குள்ளே விசுவாசம் என்கின்ற புண்ணியம் அஸ்திவாரமாய் இருக்கிறபடியினாலே முந்த முந்த விசுவாசப்பிரமானம் சொல்கிறது.

விசுவாசப் பிரமாணம் (பாடுபட்ட சிலுவையில்) :
                        
  • பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
  • அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.
  • இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச்சிஷ்ட கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.
  • போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
  • பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
  • பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார்.
  • அவ்விடத்திலிருந்து ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
  • பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
  • பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
  • அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
  • பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
  • சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.
  • நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறேன்.
ஆமென்.

பெரிய மணியில்:

                        மெய்யான இறைவனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற இயேசுநாதர் சுவாமி படிப்பித்த பரலோக மந்திரம் சொல்கிறது.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

ஆமென்.
 மூன்று சிறிய மணிகளில்: 

1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்வர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

அர்ச்சிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
அருள் நிறைந்த....
3. தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
அருள் நிறைந்த....
திரித்துவத் துதி (மூன்று சிறிய மணிகளுக்குப் பின்) :

              பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். 

ஒவ்வொரு மறை உண்மைகளைச் சொல்லி தியானிக்கவும்

        ஒரு பரலோக மந்திரம், 10 அருள் நிறைந்த மந்திரம் மற்றும் ஒரு திரித்துவத் துதி.

ஒவ்வொரு பத்து மணிகள் முடிந்ததும்:

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும்.
எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும்.
உமது இரக்கம் யார் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களை மோட்சம் கொண்டு சேர்த்தருளும்.
                             

                                 மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்:  (திங்கள், சனி)                                         

  1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக.
  2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
  3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
  4. இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
  5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
                                                      
                                   துயர் மறை உண்மைகள்: (செவ்வாய், வெள்ளி)                         Image result for மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்:
  1. இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக!
  2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டதைத் தியானித்து, புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக!
  3. இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒடுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும் செபிப்போமாக!
  4. இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக!
  5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக!

                             மகிமை நிறை மறை உண்மைகள்:  (புதன், ஞாயிறு)

  1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ செபிப்போமாக!
  2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!
  3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!
  4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக !
  5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக !

                              ஒளி நிறை மறை உண்மைகள்:  (வியாழக் கிழமை)                                
  1. இயேசு யோர்தான ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக !
  2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக !
  3. இயேசு விண்ணரசைப் பறைசாற்றியதை தியானிப்போமாக !
  4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக !
  5. இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக !
   
ஜெபமாலை நிறைவில்:

                     அதிதூதரான புனித மிக்கேலே! தேவதூதர்களான புனித கபிரியேலே, ரபேலே! அப்போஸ்தலர்களான புனித இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே! நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும், நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஜம்பத்து மூன்று மணிசெபத்தையும் உங்கள் ஸ்தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி, புனித தேவமாதாவின் திருப்பாதத்தில் பாதக் காணிக்கையாக வைக்க உங்களைப் பிராத்தித்துக் கொள்கிறோம். ஆமென்.     

புனித தேவமாதாவின் பிராத்தனை 
 
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
தூய ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
தூய்மை நிறை மூவொரு இறைவா- எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

    • புனித மரியோயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
    • சர்வேசுரனுடைய புனித மாதாவே -எங்களுக்காக ...
    • கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே ...
    • மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே...
    • கிறிஸ்துவினுடைய மாதாவே...
    • தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே...
    • மகா பரிசுத்த மாதாவே...
    • அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..
    • பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே...
    • கன்னி சுத்தங்கெடாத மாதாவே...
    • மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே...
    • ஆச்சரியத்துக்குரிய மாதாவே...
    • நல்ல ஆலோசனை மாதாவே,,,
    • சிருஷ்டிகருடைய மாதாவே...
    • இரட்சகருடைய மாதாவே...
    • மகா புத்தியுடைத்தான கன்னிகையே...
    • மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே...
    • பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட்ட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே...
    • சக்தியுடைத்தவளாயிருக்கிற கன்னிகையே...
    • தயையுள்ள கன்னிகையே...
    • விசுவாசியாயிருக்கிற கன்னிகையே....
    • தருமத்தின் கண்ணாடியே...
    • ஞானத்துக்கு இருப்பிடமே...
    • எங்கள் சந்தோஷத்தின் காரணமே...
    • தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா புஷ்பமே...
    • ஞான பாத்திரமே...
    • மகிமைக்குரிய பாத்திரமே...
    • அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே...
    • தாவீது இராஜாவுடைய உப்பரிகையே...
    • தந்த மயமாயிருக்கிர உப்பரிகையே...
    • சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே...
    • வாக்குத்தத்தத்தின் பெட்டகமே...
    • பரலோகத்தினுடைய வாசலே...
    • விடியக்காலத்தின் நட்சத்திரமே...
    • வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே...
    • பாவிகளுக்கு அடைக்கலமே...
    • கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே...
    • கிறிஸ்தவர்களுடைய சகாயமே...
    • சம்மனசுக்களுடைய இராக்கினியே...
    • பிதா பிதாக்களுடைய இராக்கினியே...
    • இறைவாக்கினர்களுடைய இராக்கினியே...
    • அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே...
    • மறைசாட்சிகளுடைய இராக்கினியே...
    • துதியர்களுடைய இராக்கினியே...
    • கன்னியர்களுடைய இராக்கினியே...
    • அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே...
    • ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே...
    • பரலேகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே...
    • திருச் செபமாலையின் இராக்கினியே...
    • சமாதானத்தின் இராக்கினியே...

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி
                   
                    சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே ! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். ஆமென்.

                      இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜெபிப்போமாக :

                   இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

கிருபை தயாபத்து மந்திரம்

                        கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!

- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக

- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

ஜெபிப்போமாக:

                     சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
 
புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:
                        
                        மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே ஆமென்.

                        ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சிஷ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். (மூன்று முறை)

அருள்நிறைந்த மந்திரம் (மூன்று முறை)

பரிசுத்த பாப்பரசரின் கருத்துக்கள் நிறைவேறும் படியாக ஜெபிப்போமாக :

ஒரு பரலோக மந்திரம், ஒரு அருள் நிறைந்த மந்திரம் மற்றும் ஒரு திரித்துவத் துதி சொல்வோம்.

                        தேவவரப்பிரசாதத்தின் தாயே ! இரக்கத்திற்கு மாதாவே ! புனித மரியாயே ! எங்கள் மாற்றானின் சோதனையிலும் எங்கள் மரண நேரத்திலும் உமது திருக்குமாரனை வேண்டி எங்களை காக்கவும், ஆளவும், கை கொண்டு நடத்தவும் வேண்டும் என்று உமது திருப்பாதம் முத்தம் செய்து மன்றாடுகிறோம் . ஆமென்.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.       

                            

இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை

                                                                   இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே ...