வல்லமையுள்ள ஜெபமாலை
அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரம்:
அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.
பரிசுத்த ஆவி ஜெபம்:
- பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
- அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.
- இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச்சிஷ்ட கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.
- போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
- பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
- பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார்.
- அவ்விடத்திலிருந்து ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
- பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
- பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
- அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
- பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
- சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.
- நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறேன்.
மெய்யான இறைவனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற இயேசுநாதர் சுவாமி படிப்பித்த பரலோக மந்திரம் சொல்கிறது.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
ஆமென்.
1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்வர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
அருள் நிறைந்த....
அருள் நிறைந்த....திரித்துவத் துதி (மூன்று சிறிய மணிகளுக்குப் பின்) :
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
ஒவ்வொரு மறை உண்மைகளைச் சொல்லி தியானிக்கவும்:
ஒரு பரலோக மந்திரம், 10 அருள் நிறைந்த மந்திரம் மற்றும் ஒரு திரித்துவத் துதி.
ஒவ்வொரு பத்து மணிகள் முடிந்ததும்:
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும்.
எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும்.
உமது இரக்கம் யார் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களை மோட்சம் கொண்டு சேர்த்தருளும்.
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்: (திங்கள், சனி)
- கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக.
- கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
- இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
- இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
- காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
- இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக!
- இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டதைத் தியானித்து, புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக!
- இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒடுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும் செபிப்போமாக!
- இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக!
- இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக!
மகிமை நிறை மறை உண்மைகள்: (புதன், ஞாயிறு)
- இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ செபிப்போமாக!
- இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!
- தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!
- இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக !
- இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக !
- இயேசு யோர்தான ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக !
- கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக !
- இயேசு விண்ணரசைப் பறைசாற்றியதை தியானிப்போமாக !
- இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக !
- இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக !
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
தூய ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
- புனித மரியோயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சர்வேசுரனுடைய புனித மாதாவே -எங்களுக்காக ...
- கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே ...
- மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே...
- கிறிஸ்துவினுடைய மாதாவே...
- தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே...
- மகா பரிசுத்த மாதாவே...
- அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..
- பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே...
- கன்னி சுத்தங்கெடாத மாதாவே...
- மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே...
- ஆச்சரியத்துக்குரிய மாதாவே...
- நல்ல ஆலோசனை மாதாவே,,,
- சிருஷ்டிகருடைய மாதாவே...
- இரட்சகருடைய மாதாவே...
- மகா புத்தியுடைத்தான கன்னிகையே...
- மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே...
- பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட்ட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே...
- சக்தியுடைத்தவளாயிருக்கிற கன்னிகையே...
- தயையுள்ள கன்னிகையே...
- விசுவாசியாயிருக்கிற கன்னிகையே....
- தருமத்தின் கண்ணாடியே...
- ஞானத்துக்கு இருப்பிடமே...
- எங்கள் சந்தோஷத்தின் காரணமே...
- தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா புஷ்பமே...
- ஞான பாத்திரமே...
- மகிமைக்குரிய பாத்திரமே...
- அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே...
- தாவீது இராஜாவுடைய உப்பரிகையே...
- தந்த மயமாயிருக்கிர உப்பரிகையே...
- சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே...
- வாக்குத்தத்தத்தின் பெட்டகமே...
- பரலோகத்தினுடைய வாசலே...
- விடியக்காலத்தின் நட்சத்திரமே...
- வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே...
- பாவிகளுக்கு அடைக்கலமே...
- கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே...
- கிறிஸ்தவர்களுடைய சகாயமே...
- சம்மனசுக்களுடைய இராக்கினியே...
- பிதா பிதாக்களுடைய இராக்கினியே...
- இறைவாக்கினர்களுடைய இராக்கினியே...
- அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே...
- மறைசாட்சிகளுடைய இராக்கினியே...
- துதியர்களுடைய இராக்கினியே...
- கன்னியர்களுடைய இராக்கினியே...
- அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே...
- ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே...
- பரலேகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே...
- திருச் செபமாலையின் இராக்கினியே...
- சமாதானத்தின் இராக்கினியே...
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி
ஜெபிப்போமாக :
- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
ஜெபிப்போமாக:
சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:

Praise the lord
ReplyDeleteAve Maria
ReplyDeleteஇயேசுவே உமக்கு புகழ்! மரியே வாழ்க!
ReplyDelete